Thursday 12 June 2014

பிரார்த்தனைகள் பயன் தருமா ?

எங்களுக்கு பிரார்த்தனைகள் தேவைப்படுவதில்லை .....

பிரார்த்தனை என்பதே சுயநலத்தின் உச்ச அடையாளம், தன்னையும் - தன் குடும்பத்தையும் - தன் உறவுகளையும் கடவுள் காக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையில் பிரதானமாய் இருக்கிறது. வாழ்வின் மீதான பயத்தை இவர்கள் பிரார்த்தனைகள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள்.

அதே நேரத்தில்,

நாத்திகர்களுக்கு வாழ்வின் மீதான பயம் கிடையாது,
வாழ்வின் ஆபத்தான நகர்வுகளையும் எதிர்கொள்ளக் கூடிய
மன திடத்தை வளர்த்துக் கொண்டவர்கள் நாங்கள், மரணத்திற்குப் பின் சொர்க்க நரகம் குறித்த எதிர்பார்ப்பும் எங்களிடத்தில் கிடையாது,
வாழும் காலத்தில் மானுடப் பற்றை வளர்த்தெடுப்பதே,
எங்கள் வாழ்நாள் பணி.

எனவே எங்களுக்கு பிரார்த்தனைகள்,
ஒரு போதும் தேவைப்படுவதில்லை .....

- பாசு.ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment