Saturday 23 August 2014

நமக்கு எதுக்கு பாஸ் கடவுள் ? ? ?

வீட்டு வாடகைக்கு நாம் தான் உழைக்கணும்
கரண்ட் பில்லு கட்ட நாம் தான் உழைக்கணும்
கேஸ் பில்லுக்கு நாம் தான் உழைக்கணும்
கேபிள் டிவிக்கு நாம் தான் உழைக்கணும்
அரிசி பருப்பு மளிகை சாமான் வாங்க நாம் தான் உழைக்கணும்
பால் வாங்க நாம் தான் உழைக்கணும்
போன் பில் கட்ட நாம் தான் உழைக்கணும்
வண்டிக்கு பெட்ரோல் போட நாம் தான் உழைக்கணும்
ஆஸ்பத்திரி செலவுக்கு நாம் தான் உழைக்கணும்

நமக்கு எதுக்கு பாஸ் கடவுள் ? ? ?

பெரியார் கொள்கை பரப்பும் பணியில் தமிழர் தலைவர் கி. வீரமணியின் அளப்பரிய பங்கு ...

பெரியார் கொள்கை பரப்பும் பணியில் 
தமிழர் தலைவர் கி. வீரமணியின் அளப்பரிய பங்கு ... 

பெரியார் கொள்கை தாங்கும் நூல்களை தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எல்லாம் வெளியீடு. 

விடுதலை எட்டுப் பக்கம் ஆனதும், இரு இடங்களில் பதிப்பு என்று ஆக்கப்பட்டதும்,

பெரியாருக்குப் பின் உண்மை மாதம் இருமுறை ஆனதும்,

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ் மீண்டும் கொண்டு வரப்பட்டதும்,

குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழ் ஆரம்பிக்கப்பட்டதும்,

பாமர மக்களும் தந்தை பெரியார்பற்றி அறிந்துகொள்வதற்குப் பெரியார் திரைப்படம் எடுக்கப்பட்டதும்,

பெரியார் வலைக்காட்சி தொடங்கப்பட்டதும்,

முந்நூறுக்கும்மேல் பகுத்தறிவு நூல்களை மலிவு விலையில் வெளியிட்டதும்,

அதனைப் பரப்பிட பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை ஏற்பாடும்,

புத்தகக் கண்காட்சிகள் நடப்பும், பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன முறையில் ஓங்கி வளர்க்கப்பட்டு இருப்பதும்,

தமது சொந்த 10,277 நூல்களை பெரியார் நூலகம் ஆய்வகத்துக்கு தமிழர் தலைவர் வழங்கியதும்,

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்கம்பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதும்,

இந்தியாவின் தலைநகரிலேயே பெரியார் மய்யம் எழுப்பப்பட்டு இருப்பதும்,

உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரியார் பன்னாட்டு மய்யம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதும்,

உலக மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகத்தை அங்கம் வகிக்கச் செய்திருப்பதும்,

பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அதில் பெரியார் சிந்தனைகள் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு சான்றிதழ் முதல் முனைவர் பட்டப் படிப்புவரை பெறுவதற்கு வகை செய்யப்பட்டு இருப்பது.

- கலி. பூங்குன்றன் "விடுதலை" 01-08-2009

மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா ?



திருநெல்வேலி நகரத்தில் வாழும் 60 வயது முதியவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறிய மந்திரவாதி, அந்தப் பேயை ஓட்டுவதற்காக முதியவர் தலையில் மூன்று அங்குல நீளமுள்ள துருப்பிடித்த ஆணியை அடித்துள்ளார். வலியால் துடித்த அவருக்கு வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். சில நாளில் முதியவருடைய இடது கையும், இடது காலும் செயலிழந்து போகவே, அவரைப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

http://www.unmaionline.com/

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு! - விடுதலை !!!

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு! - விடுதலை!!!
ஊன்றிப்படியுங்கள்.... உண்மையை உணருங்கள்!

நன்றி - ம. இனியரசன்

தேவர்களே, மறவர்களே, கள்ளர்களே, அகமுடையோர்களே, படையாட்சிகளே, கவுண்டர்களே, பறையர்களே ...

தேவர்களே, மறவர்களே, கள்ளர்களே, அகமுடையோர்களே, படையாட்சிகளே, கவுண்டர்களே, பறையர்களே, பள்ளர்களே, நாயக்கர்களே, நாடார்களே, பிள்ளைகளே, நாயுடுகளே, சக்கிலியர்களே, செட்டியார்களே, முதலியார்களே, மருத்துவர்களே, இடையர்களே இத்தியாதிகளே.... இத்தியாதிகளே....

கோவில் கருவறைக்குள் நுழைய முடியாமல், வெளியில் நின்று, உடலை குறுக்கி, உள்ளங்கையை குவித்து, பணிந்து பார்ப்பானிடம் திருநீறு, குங்குமம் பெறும்போது வெட்கமாக இல்லை?!

பார்ப்பானை விட நாம் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்படவில்லை?!

பிச்சைக்காரனைப் போல ஏன் கருவறைக்கு வெளியே நிற்கவேண்டும்? என்று நீங்கள் சிந்தித்ததே இல்லையா?!

இனி கருவறைக்கு வெளியே நின்று.... பார்ப்பான் தரும் எதையாவது வாங்கும்போது .... அவன் .... த்திரத்தை கையில் வாங்குவதுபோல நினைத்துப்பாருங்கள்! அப்போதாவது உங்களுக்கு சூடு சுரணை ஏதாவது வருகிறதா? என்று பார்ப்போம்.

- விஜய் குமார்.

ஜாதி மதம் - கவிதை

நீ
எந்த மதக் குடும்பத்தில்
பிறக்கிறாயோ,
அந்த மதமே
உன் மதமாய்
திணிக்கப்படும் ...

நீ
எந்த ஜாதிக் குடும்பத்தில்
பிறக்கிறாயோ,
அந்த ஜாதியே
உன் ஜாதியாய்
திணிக்கப்படும் ...

எதிர்காலத்தில்
நீ விருப்பப்பட்டால்
மதம் மாறலாம்
ஜாதி மாற முடியுமா ? ?

- பாசு . ஓவியச்செல்வன்

ஆகஸ்டு என்றால் போராட்டக் களங்கள் - மயிலாடன்

ஆகஸ்டு : 

ஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றி பேசுவார்கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட்டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.

1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்!

திரு. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளிகளில் இந்தியைக் கொண்டு வரப்போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).

6,7,8 ஆம் வகுப்புகளில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக்கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.

அதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப்பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.

ராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப்பட்டதாகும். (100 பேர்கள்)
படைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ்சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம்
அம்மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.

படையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே! என்ற முழக்கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.

கட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.

இதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத்திக் காட்டினார்.

அந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறிவித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க!

- மயிலாடன்

பெரியாரின் தாக்கம் பெரியவாளிடம் ! - மயிலாடன்



சக்தி விகடன் பொறுப்பாசிரியராக இருந்த ரவி பிரகாஷ் இதோ எழுதுகிறார் படியுங்கள்! படியுங்கள்!!

பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) ஒருமுறை மேனாவில் (பல்லக்கில்) சென்று கொண்டிருந்த போது, வழியில் மேடைப் போட்டு பெரியார் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்து கொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லா சுகங்களையும் துறக்கவேண்டும்; இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்று முழங்கிக் கொண்டிருப்பது பெரியவாளின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான், மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லிவிட்டு, இறங்கி விட்டார் பெரியவர்.

அவர் ஏதோ சொல்றார், சொல்லிவிட்டுப் போறார், அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ!

உங்களைச் சுமந்து கொண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம் என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் கெஞ்சியிருக்கிறார்கள். இல்லை, அவர் சொல்றது தான் சரி. சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போகிறேன் என்று தீர்மானமான முடிவெ டுத்து விட்டார்.

கடைசி வரையிலும் அவர் அந்த முடிவிலிருந்து மாற வில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும் வரை நடந்துகொண்டே இருந்தன. இது வெளிவந்த இதழ் சக்தி விகடன் - எழுதியவர் அதன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் - அதற்குச் சாட்சியமாகக் கூறப்பட்டவர் 40 ஆண்டு காலம் சங்கராச்சாரியாரிடம் சேவை செய்த இலட்சுமி நாராய ணன் என்பவர் - மாங்காட்டில் இருக்கக்கூடியவர்.

பெரியவாளிடமும்கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியாரன்றோ! -

- மயிலாடன்

அர்ச்சகப் பார்ப்பனரைச் சுமந்து வரும் வழக்கம்

பல்லக்கிலா ?

திராவிடர் இயக்க ஆர்வலரும், நீண்ட நாள் விடுதலை வாசகருமான தோழர் நெய்வேலி க. தியாகராசன் அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். தனியார்த் தொலைக் காட்சி ஒன்றில் ஒரு சொற் பொழிவாளர் சொன்ன தகவல்தான் அது.

மனிதனை மனிதன் வைத்து இழுத்த கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டு விட் டது. மனிதக் கழிவுகளை மனிதன் சுமக்கும் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால்
மனிதனை சாமி சிலையோடு சேர்த்துச் சுமக்கும் இழிவு இன்னமும் தொடர்கிறதே ஏன்? ஆன்மீகவாதிகள் சிந்திப்பார்களா!

அந்தத் தனியார்த் தொலைக்காட்சியில் இவ் வாறு கூறியவர் ஒர் ஆன்மிகவாதியென்றால் ஆச்சரியமாகவே இருக்கும். அவர் வேறு யாருமல்ல - சுகி சிவமே!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமை மீறலை எதிர்த்துத் திராவிடர் கழகம் போராட்டங்களை கூட நடத்தியதுண்டு.

திருவாரூரையடுத்த தப்பளாம்புலியூர் என்ற ஊரில் சாமியோடு அர்ச்சகப் பார்ப்பனரைச் சுமந்து வரும் வழக்கம் இருந்து வந்தது. திராவிடர் கழகம் எச்சரித்து, அடுத்து போராட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் அந்த பழக்கம் கைவிடப்பட்டது.

சிறீரெங்கத்தில் ரெங்க நாதன் கோயிலில் நெடுங் காலமாக பிரம்மரத முறை உண்டு; பல்லக்கில் பார்ப்பனர்களைச் சுமந்து வரும் நிகழ்ச்சி அது. கைசிக ஏகாதசியில் கைசிகப் புராணம் பாடி முடித்து, காலையில் பிரம்ம ரதத்தில் ஏறிக் கொள்வர் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள். அவர்களை சிறீ பாதம் தாங்குவோர் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்கள். (சூத்திரத் தமிழர்களான தூக்கிச் செல்பவர்களுக்கு அப்படி ஒரு பெயர்) திராவிடர் கழகம் அதனை எதிர்த்தது; இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் அதனைக் கை விடக் கோரினர் எதிர்த்து அர்ச்சகப் பார்ப்பனர்கள் நீதி மன்றம்கூட சென்றனர்; தீர்ப்பையும் மீறி பல்லக்கில் பார்ப்பனர்கள் பவனி வர முயன்றனர். திராவிடர் கழகம் களத்தில் இறங்கி யது. விளைவு சிறீபாதம் தாங்குவோரும் (சுமப்பவர் களுக்கு இப்படியொரு பெயர்) இனி பார்ப்பனர் களைப் பல்லக்கில் வைத்துத் தூக்க மாட்டோம் என்று எழுத்து மூலமாகவே எழுதிக் கொடுத்து விட்டனர். அத்தோடு ஒழிந்தது (7.12.2011)

மடாதிபதிகளும் பல்லக்கில் வருவதுண்டு. அப்படித்தான் திருவா வடுதுறை ஆதீன கர்த்தர் ஆண்டுதோறும் பட்டினப் பிரவேசம் என்று கூறி மற்றவர்கள் தூக்கி சுமக்கப் பவனி வருவார்.

திராவிடர் கழகம் களத் தில் இறங்கி மறியலுக்குத் தயாரானது. விளைவு அந்தப் பட்டினப் பிரவே சத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சங்கராச்சாரியார்கள் பல்லக்கில் செல்லுவதும் அடியோடு ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் காரணம் தந்தைபெரியா ரும், திராவிடர் கழகமுமே!

- மயிலாடன்

https://www.facebook.com/ottraipaththi.viduthalai

கவிதை - நினைவலைகள்

நீக்கமற
நிறைந்து போன
நினைவலைகளை
அழித்தொழிப்பதில்
எத்தனை எத்தனை
உளவியல் சிக்கல்கள் ...

- பாசு . ஓவியச்செல்வன்

ஜாதி வெறி

சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நவீன செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறியர்கள் அவர் காதை அறுத்தெரிந்த ஊர்தான், தமிழை மிகவும் ‘மரியாதையாக’ பேசுகிற கோவை மாவட்டம்.

- வே.மதிமாறன்

தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால் ....



தனது ஜாதியின் பெருமை, ஜாதிக்கான கவுரவம் எல்லாவற்றையும் தன் ஜாதி பெண்களின் நடவடிக்கைகளிலேயே வைத்திருக்கிறார்கள் ஆதிக்க ஜாதிக்கார்கள்.

இந்த ஜாதிரீதியான கவுரவங்களில், தன் ஜாதியைவிட ‘உயர்ந்த’ ஜாதிக்காரரோடு காதல் திருணமத்தை தன் பெண் செய்து கொண்டால், அதை பெரிய அவமானமாக கருதுவதில்லை.

வன்னியர் ஜாதி பெண்ணையோ, கள்ளர் சமூகத்து பெண்ணையோ, நாடார் பெண்ணையோ; ஒரு பார்ப்பனரோ, பிள்ளையோ, முதலியோ திருமணம் செய்துகொண்டால்; பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் குடியிருப்புகளில் புகுந்து அவர்களை தாக்குவது, வீடுகளை சூறையாடுவது கிடையாது.

இதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் அடிமை மனோபாவம்.

மாறாக தன் பெண் தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால்தான், இந்த கொலை வெறி தாக்குதல்கள்.

- வே.மதிமாறன்

இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை ....



காதல் திருமணங்களில், ஆண் ஆதிக்க ஜாதியாக இருந்து, பெண் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அந்த திருணங்களை தன் ஜாதிக்கு ஏற்பட்ட கலங்கமாக ஆதிக்க ஜாதிக்காரர்கள் பார்ப்பதில்லை.

காரணம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்வதை, தனது ஜாதி திமிர்களில் ஒன்றாக கருதுவது இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை.

ஒருவேளை, தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பது பிரச்சினையானலும், அது மகனுக்கும் அப்பனுக்குமான சண்டையாக முடிந்து, மகன் வீட்டை விட்டு வெளியேறுவதோடு முடிந்துவிடும்.

மாறாக, பெண் ஆதிக்க ஜாதியாகவும், ஆண் தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால், அந்த திருமணச் சண்டை குடும்ப சண்டையோடு முடிவதில்லை. அந்தச் சேரியில் உள்ள ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதலாக வடிவம் பெறுகிறது.

- வே.மதிமாறன்

கவிதை - பன்றி அவதாரம் எடுத்த கடவுள்

பன்றி அவதாரம் எடுத்த கடவுள்...

பைரவர் வாகனம் நாய்
மாடு புனிதம்
மிருகங்களிடம்
கருணை காட்டும் இந்து மதம்
தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்ல
மிருகமாகக்கூட மதித்ததில்லை
பன்றி அவதாரம் எடுத்த கடவுள்
தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.
ஆனாலும் மகாத்மா
கூச்சமில்லாமல் சொன்னார்
தாழ்த்தப்பட்ட மக்களே
கடவுளின் குழந்தைகள்
ஹரிஜன்

- வே.மதிமாறன்

நன்றி - உண்மை இதழ் ( மாதமிருமுறை )

தொலைக்காட்சியைப் படைத்த அறிவியலாளர் ஜான் லோகி பெயர்ட்

தொலைக்காட்சியைப் படைத்த அறிவியலாளர் ஜான் லோகி பெயர்ட்
126 ஆவது பிறந்த நாள் விழா ....

பெரியார் வலைக்காட்சி, பெரியார் நூலக வாசகர் வட்டம், பூமி சுழற்சி பெயர்ச்சி இரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

http://viduthalai.in/

பெண்ணுரிமை - இஸ்லாம்

“பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோரும்போதெல்லாம் இஸ்லாமியச் சட்டங்களில் அவற்றிற்கு இடமில்லை என வாயடைக்கப் படுகிறது. ஆனால் இதற்கு எவ்விதமான அடிப்படையும் இல்லை. இஸ்லாம் அப்படியெல்லாம் சொல்லவில்லை. இந்த ஆணாதிக்கச் சமூகம்தான் தன் விருப்புக்குரிய வகையில் விளக்கங்களைக் கொடுத்து அவர்களை முடக்குகிறது” 

- ஷிரின் எபாடி ( நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி )

தகவல் - அ.மார்க்ஸ்

தீர்த்தம்

மாட்டு மூத்திரத்தை தீர்த்தம் என்றும் அது கிருமிநாசிணி என்றும் சொல்லும் இந்து ப(க்)தர்கள், இனி மேல் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மாட்டு மூத்திரத்தை குடிங்களேன். அது தான் கிருமிநாசிணியாச்சே .... நோயே வராதே ...

கவிதை - ஆத்திரம்

ஆத்திரம்

உன்னைக் கண்டாலே
தீட்டென்றவன்
ஆலயத்திற்குள் உன்னை
அனுமதிக்காதவன்
பாதத்தில் பிறந்ததாய்
நீ சூத்திரனென்று சூழ்ச்சி செய்தவன்
நீ கல்வி கற்பது
மகா பாவமென்றவன்
பஞ்சம் பிழைக்க வந்த
அந்த பரம அயோக்கியன்
அவனிடம்
தோஷம் கழிக்க
ஆரூடம் கேட்கும் உன்னை
அடித்தாலும் தீராது
கலகக்காரரின்
ஒரு நூறு ஜோட்டால்.

- பி. செழியரசு,தஞ்சை

Sunday 17 August 2014

சீமான் எனும் ஈழ அரசியல் வியாபாரி

தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என திரைப்பட இயக்குநர் சீமான் சொல்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், இதுவ்ரை எத்தனை மேடைகளில் தமிழ்நாட்டு பிரச்சனைகளை ( ஈழம் தவிர்த்து ) அவர் பேசி இருக்கிறார் ? என்னென்ன பிரச்சனைகளை பேசி இருக்கிறார் ?

இளைஞர்களை தம் பின்னால் இழுக்க, ஈழ அரசியலை கையிலெடுத்து பிழைப்பு நடத்தும் சீமான்களின் முகமூடிகள் வெகு விரைவில் கிழியும் ....

ஈழமும் திராவிடர் கழகமும் ...

தமிழத் தேசியர்களே உங்களில் யாராவது இத்தனைமுறை
--------------------------------------------------------------------------------------------------

ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சிறைப்பயணம்

1. 23.01.1983 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக் கொடி காட்டியதற்காக கைது.

2. ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஆகஸ்டு 15 ஆம் தேதியை துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக் கொடி ஏற்றியதற்காக 1984 ஆம் ஆண்டு கைது.

3. ஈழத்தில் இராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக்குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு 7.9.1984 ஆம் ஆண்டு கருப்புக்கொடி காட்டியதற்காக சென்னையில் கைது.

4. 20.2.1987 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தூத்துக்குடியில் நடைபெற்ற கப்பல் மறியல் போராட்டத்தில் கைது.

5. 1.6.1987 ஈழத் தமிழர் பிரச்சனைக்காக சென்னையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கைது.

6. 2.8.1987 ஆம் ஆண்டு ராஜூவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகலை எரித்ததால் சிறை.

7. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 26.10.87 முதல் 4.1187 வரை சிறை.

8. 25.01.1988 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம். இதனால் கைது.

9. 21.3.1988 இல் ஈழத் தமிழருக்கு துரோகம் செய்து மதச்சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி சென்னையில் கைது.

10. 10.09.1988 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்சென்றபோது கைது.

11. 31.08.1995 ஆண்டு ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது.

12. 23.09.2008 ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கைது.

13. 02.09.2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கைது.

14. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கடந்த ஆண்டு டெசோ சார்பில் நடந்த போராட்டத்தில் கைது.

பொது வாழ்வில் தமிழர் நலனுக்காக 48-க்கும் மேல்பட்டமுறை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறை சென்றுள்ளார். அதில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக 14-க்கும் மேல்பட்ட முறை சிறை... தமிழத் தேசியத் தலைவர்களே ஈழத் தமிழர் பிரச்சனைக்காக எத்தனைமுறை சிறை சென்றிருக்கிறீர்கள். இவை சிறைபட்டியல் மட்டுமே.... விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வந்து முதலில் சந்தித்த தலைவர் கி.வீரமணி என்பதும்.... இன்னும் ஏராளமான வரலாறுகளும் திராவிடர் கழகத்திற்கு உண்டு.... அந்த நெடிய வரலாறும் இணைக்கப்படும்.

- இளந்திரையன் தமிழ்மாணவன்

திராவிடத்தால் வீழ்ந்தோம் ? ? ?

திராவிடத்தால் வீழ்ந்தோம்
------------------------------------------------

தமிழ் தேசியம் என்ற பேரில் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற நூலை குணா எழுதியுள்ளார்//

அவர் தேவணாய பாவணரின் நினைவாக எழுதிய நூல் என்று முன்னுரையில் எழுதியுள்ளார். பாவணரை வைத்தே நிருபிக்கிறேன் இவன் புலுகலை.
---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் 1:

பார்பனர் வேறு, ஆரியர் வேறு - புலுகல் குணா

பார்பணர் ஆரியரே- மொழி ஞாயிரு பாவணர் (ஆதரம்: ஒப்பியம் மொழி இலக்கணம்)

ஆரியர் என்பது பிராமனரே- பாவணர் (ஆதரம்: தமிழ் மதம்)

ஆரியச்சார்பினால் தமிழ் கெட்டதுமின்றித் தமிழ்ர் தம் தாய்மொழி உணர்ச்சியும் இழந்தனர். அதனால் தமிழர் தாழ்வுற்றனர்- பாவணர் (தமிழர் வரலாறு)
---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் :2

ஆரியக் கொள்கையும், பண்பாடும் புத்த ஜைன மதங்களால் தமிழகத்திற்கு கொண்டு வந்தன.- புலுகன் குணா.

ஆரிய மதத்திற்கு எதிராய் வந்தவை புத்தமும், சமணமும்- பாவணர் (ஒப்பியன் மொழி நூல்)

கைபர் கணவாய் வழியாக ஆரியன் வந்ததாக வரலாறுகளே இல்லை இப்படி பொய்யான மோசடியை கூறி பெரியார் தமிழ் மக்களை ஏமாற்றினார். -புலுகன் குணா

ஆரியர்கள் ஆசியானின்று பால்டிக் நாடுகளிலும் கண்டினேவிய நாட்டிலுமே இருந்தது அங்கே ஆரிய மொழிகள் எழுந்தது. ஆரியர்கள் சிந்து நதி வழி கடந்து இந்தியவிற்கு நொழைந்தனர், பாரசீகர் சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தாங்கள் சிந்துவை ஹிந்து என மாற்றினர் பின்பு கிரேக்கர்கள் இந்தி என்ற் திருத்தி கடைசியில் இந்தியா என்று ஆனது- பாவணர் (ஒப்பியின் மொழி நூல் ஆய்வு நூலில் கூறியிருப்பதாவது -பக்கம் 20-27)
---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர்
ஆரியர்கள் தமிழகத்தின்மீது படை கொண்டு படையெடுத்த வராலாறு ஏதும் இல்லை!-புலுகன் குணா

ஆரியத்திற்க்கும்-பழங்க்குடிக்கும் இடையில் நடந்த போரெல்லாம் ஆரியர்க்கும் -அவர்களை ஏற்க்காதவர்களுக்குமானப் போர்- பாவணர் (தமிழர் மதம்)

---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் :4

தமிழனை தவிர மற்ற மாநிலத்தாரையே பெரியார் உயர்த்த என்னினார்- புலுகன் குணா,

தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமான் அல்ல, மலையாளியும் தான் அதிகாரி: இனி அதற்கு இடமில்லை (ஈ வெ ரா சி:பக்கம் 692)

தமிழன் முதலமைச்சராக வந்திருக்கிறார் என்று உணர்வு பொங்கி கூறி மகிழ்ந்தவர் பெரியார்- (ஈ வெ ரா சி. ப.831)

தமிழ் படிக்க, பேச, எழுத, தெரியாத மலையாளத்தானும், கன்னடனும், தெலுங்கனும், தமிழ் நாட்டில் ஜில்லா உத்தியோகத்தில் இருந்தால் எந்த விதத்தில் மொழியை இந்த அரசாங்கம் ஆதறிக்கிறது என்று சொல்ல முடியும். (வெளி மாநிலத்தாரை அரசு பணியில் அமர்த்துவதை கண்டித்து 22.04.1955-இல் பெரியார் விடுத்த அறிக்கை)

பெரியார் இறந்து 40 ஆண்டுகள் ஆகிறது, இந்த 40 ஆண்டுகளில் தானே மற்ற மாநிலத்தார் ஊடுருவல் அதிகம் நடந்துள்ளது, பெரியாரை குறைச்சொல்லும் கழிசடைகள் இதை தடுக்க கிழித்தது என்ன?

---------------------------------------------------------------------------------------------------------------------
புலுகல் நம்பர் :5

தமிழ் வேறு திராவிடம் வேறு/ பெரியார் தமிழ் தேசியம் அமைக்க முற்படாமல் தெரியாத திராவிடத்தை எடுக்கவே தமிழ் தேசம் கிடைக்காமல் போனது-புலுகன் குணா.

தமிழே. திரா விடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட -திராவிடம்.-மொழி ஞாயிரு பாவணர். ஒப்பியன் மொழி நூல் பகுதி-1, பக்கம்-15, தமிழ்மண்-ஆய்வு நூல்)

---------------------------------------------------------------------------------------------------------------------

பெரியாரை பற்றி உண்மையான தமிழ் உணர்வாளர்கள்
***********************************************************************

''மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை?''

- காசி ஆனந்தன்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

-புரட்சிக்கவிஞர்.

“தமிழன் விடுதலை தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்.-

-மொழி ஞாயிரு தேவணாய பாவணர்

தமிழினத்தை காக்க, முன்னேற்ற மூவர் தோன்றினர்கள் அவர்கள் திருவள்ளுவர், மறைமலையடிகள், மற்றும் பெரியார்-
பெரியாரிடம் உள்ள விஷேச குணம் என்னவென்றால், மனத்திற்கப்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தமக் குணம் தான்

- வ .உ.சி

-புரட்சிக்கவிஞர்.
-காசி ஆனந்தன்.
-மொழி ஞாயிரு தேவணாய பாவணர்
- வ.உ.சி

இந்த தமிழர்களை விடவா? உணர்வாளர்கள் பெரியாரை ஏசும் இந்த பார்ப்பன கைகூலிகள்…

உருவாக்கியது- திலீபனின் மகேந்திரன்
எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. 
ஆனால் அதை உள்வாங்கிக் கொண்ட அடிப்படைவாதிகளின் லட்சணம் இதுதான்.. 

ஈராக்கில் சதாம் ஆதரவு படையினர் 1700க்கும் மேலானவர்களை இப்படி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.

பார்க்கும்போதே நெஞ்சடைக்கிறது..

ஒரே மார்க்கத்திற்குள் இருக்கும் இரு பிரிவுக்குள் இவ்வளவு வெறித்தனம் என்றால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யோசித்துப்பாருங்கள்..

இந்த லட்சணத்தில் உலக அமைதியையே நாங்கதான் போதிக்கிறோம்னு நமக்கு வேற வகுப்பெடுக்க வர்றாய்ங்க..

மொதல்ல மனுசனாகப் பாருங்கப்பா.. அப்புறம் போதிக்கலாம்..

- Bala Cartoonist Bala

இந்தி திணிப்பு பற்றி தமிழர்களுக்காக ஒரு கேள்வி பதில் :



1) இந்தி தேசிய மொழியா?

இல்லை. தேசிய மொழியாக இருந்தால் மத்திய அரசி இப்படி திருட்டுத்தனமாக திணிக்க வேண்டிய தேவையே வராதே! இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது என்றுதான் அதன் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதையே சமீபத்தில் அகமதாபாத் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

2) ஏன் மத்திய அரசு தமிழ்நாட்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை இந்தியில் தொடர்பு கொள்ளச் சொல்கிறது?

தமிழ்நாட்டுக்கு 1930ல் பெரியாராலும், 1960களில் திமுகவாலும் ‘இந்தி திணிப்பு’ என்னும் நோயைத் தடுக்கும் ’இந்தி திணிப்பு எதிர்ப்பு’ என்னும் தடுப்பூசி போடப்பட்டதுதான் காரணம். நமக்கு இந்தி திணிப்பிற்கு எதிராக constitutional immunity உண்டு. நாம் எப்போதோ பெற்ற அதைப் பெற, இப்போதுதான் பெங்காளிகளும், கன்னடர்களும், மராட்டியர்களும், தெலுங்கர்களும் கிளம்பியிருக்கிறார்கள். அதன் பொருட்டே மத்திய அரசுக்கு எதிரான கலைஞரின் சமீபத்திய அறிக்கையை தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னோடிகள் நாம், நம் தமிழகத்தின் திராவிட இயக்கம்!

3) ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒரு தேசியமொழி வைத்திருப்பதால் தான் முன்னேறியிருக்கிறார்கள் என்பது உண்மையா?

பச்சைப் பொய். அவர்கள் ஒரு தேசியமொழியை உபயோகிப்பதால் முன்னேறவில்லை, தங்கள் தாய்மொழியை உபயோகிப்பதால் முன்னேறியிருக்கிறார்கள். இந்தியர்கள் தாய்மொழு என்ன என்பதற்கு ஒரு வார்த்தையில் உங்களால் பதில் அளிக்க முடியுமா?

4) இந்தி படித்தால் என்ன கெட்டுவிடப் போகிறது? இந்தி அன்னிய மொழி என்றால் ஆங்கிலமும் அந்நிய மொழிதானே?

எந்த மொழியைப் படித்தாலும் நல்லதுதான். ஆனால் தேசிய மொழியாக ஆக்கி, கட்டாயத்தின் பேரில் படிப்பதுதான் ஜனநாயக விரோதமானது, தவறு. பிறந்ததில் இருந்து தாலாட்டு முதற்கொண்டு எல்லாவற்றையும் இந்தியிலேயே கேட்டு வளரும் ஒரு குழந்தையுடன், இந்தியை ஒரு பாடமாக மட்டும் பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகள் எப்படி போட்டி போட முடியும்? இந்தி தேசியமொழி ஆக்கப்பட்டு அரசு தேர்வுகள் அனைத்தும் இந்திதான் என்றால் இந்தி அல்லோதோரின் நிலை நக்கிக்கொண்டு போய் விடாதா? எனக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும் என்பதற்காக, ஒரு ஆங்கிலேயனுடன் என்னால் ஆங்கிலத்தில் போட்டி போட முடியுமா? அது நியாயமான போட்டியாக இருக்க முடியுமா? இந்தப் பிரச்சினையை சரி செய்யத்தான் எல்லா மொழியினருமே ஒரு பாடமாக கற்கும் ஆங்கிலத்தை இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆக்கியிருக்கிறார்கள். மேலும் உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன். ஆங்கிலம் தமிழுக்கு எவ்வளவு அந்நியமோ, அதைவிட அந்நியம் இந்தி! இந்தியா என்ற நாடே சமீபத்தில் உருவானது என்பதை நினைவில் கொள்க!

5) இந்தியைத் திணிப்பதால் இந்தியா உடையுமா?

கண்டிப்பாக உடையும்? ரஷ்யா கம்யூனிசத்தால் உடைந்தது என்றா நினைக்கிறீர்கள்? ரஷ்ய மொழியை திணித்ததால் உடைந்தது!

- டான் அசோக்

Saturday 16 August 2014

எளிமை விரும்பி காமராஜர் ...

நிகழ்ச்சி தொடங்க கொஞ்சம் தாமதமாகும் என்று பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து, பக்கத்துல ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டு தரோம், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ஐயா என்று சொல்கிறார்கள். எதுக்கு துட்டுக்கு புடிச்ச கேடா என்று கேட்டு விட்டு, ஏய் ”ஒரு பென்ஞ்சை எடுத்து அந்த வேப்ப மரத்துக்கு கீழ போடுங்கேன்”னு சொல்லி, தோளில் கிடந்த துண்டை தலைக்கு கொடுத்து படுத்து கொஞ்சம் ஓய்வு எடுக்க தொடங்குகிறார் ஒரு முதல்வர்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா உங்களால் ?

அந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜர்.

அதனால்தான் அவர் பெருந்தலைவர்.

- Muthazhagan Ma

கடவுள் தோன்றியது எப்படி ?

ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிவப்பாகவும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான உதாரணம் அது.

- Vilvam Cuba

பெண்ணுரிமை குறித்து பெரியார் ...

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்த மாட்டான்.

- தந்தை பெரியார்

ஜாதிகளை உண்டாக்கியது யார் ?



ஜாதிகள் பார்ப்பனரால் (ஆரியர்களால்) ஏற்படுத்தப்பட்டவையேயாகும். 

ஆரியர் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் 
நம் நாட்டில் ஜாதி என்பதே கிடையாது.

- தந்தை பெரியார்

கடவுள் இணையத்தில் இருக்க மாட்டாரா என்ன ?



இப்போதெல்லாம் கடவுள் இருக்கிறார் என முட்டாள் தனமான கருத்துக்களோடு விவாதம் செய்பவர்களை பார்த்தால் கோபம் தான் வருகிறது, அதோடு அவர்களின் அறியாமையை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது.

கடவுள் தன் இருப்பை நேரடியாக உணர்த்துவதில் அவருக்கு என்ன சட்டச் சிக்கல் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இல்லை யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒளிந்து திரிய அவர் என்ன கடன்காரனா ? 

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் இணையத்தில்  இருக்க மாட்டாரா என்ன ? இந்தப் பதிவை கடவுள் படிக்கட்டும், படித்து விட்டு ரோசம் இருந்தால் அவர் தன் இருப்பை உணர்த்தட்டும்.

அத விட்டுட்டு, கல்லை காட்டி மண்ணை காட்டி நாயைக் காட்டி கடவுள்ன்னு நம்ப சொல்றது, அவருக்கு உருவம் இல்லை புருவம் தான் இருக்குன்னு பீலா விடுறத கேக்கவே கேவலமா இருக்கு. மனிதன் அவ்வளவு அறிவு கெட்டுப் போய்ட்டானேன்னு வருத்தமா இருக்கு.

அறிவு வளர்ச்சி அடையாத குழந்தைப் பருவத்தில் அவர்கள் மனதில் பெற்றோர்களால் விதைக்கப்படுகிற கடவுள் எனும் கற்பனைப் பாத்திரம், அவர்கள் வளந்த பின்னும் அவர்களை யோசிக்க விடாமல் - கேள்வி கேட்க விடாமல் ஆக்கி விடுகிறது, காரணம் நெடுங்காலமாய் அவர்கள் மனதில் தேக்கி வைத்த சிந்தனை அது. அவர்கள் அதை விட்டு வெளியே வருவதும் அவ்வளவு சுலபமானது அல்ல.

எது நடந்தாலும் கடவுள் செயல்ன்னு சொல்றான், இதை விட பெரிய கொடுமை குழந்தை பிறந்தாக் கூட கடவுள் செயல்ன்னு சொல்றான், குழந்தை பிறந்ததில் கடவுளின் பங்களிப்பு இருக்குன்னு சொல்லி, குடும்பத்துக்குள்ள பிரச்சனைகளை உண்டாக்குறான். எல்லாம் கடவுள் செயல் என்றால் யாருமே வேலைக்கு போகாமல் வீட்டிலே தூங்கிக் கொண்டா இருக்கிறார்கள் ? ?

நாம் பயன்படுத்தும் அத்தனை பொருள்களிலும் மனித உழைப்பும் வியர்வையும் கொட்டிக் கிடக்கிறது. தயவு செய்து எல்லாம் அவன் செயல் எனச் சொல்லி மனித உழைப்பை கேவலப்படுத்தாதீர்கள் .

- பாசு . ஓவியச்செல்வன்

கோயில் திருவிழா ...

வீட்டின் அருகில் இருக்கிற ஒரு கோயிலில் திருவிழா. ரெண்டு மூனு நாளா அம்மனை அலங்காரம் பண்ணின மாட்டு வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். 

ஊர்வலத்தின் இடையிடையே அம்மன் டிராவல் பண்ணும் மாட்டு வண்டி நிற்கிறது, அப்போது பக்தர்கள் பூசாரியின் கையிலிருக்கும் சூடத் தட்டை பயபக்தியோடு தொட்டுக் கும்பிட்டு விட்டு, சில்லரை காசுகளையும் நோட்டுகளையும் அந்த தட்டில் போடுகிறார்கள் .

உலோகத்தில் செய்யப்பட்ட அந்த அம்மன் சிலை, யார் பக்கமும் திரும்பவோ - யாரிடமும் பேசவோ - இருமவோ - தலை சொறியவோ - சிரிக்கவோ இல்லை.

அது சிலை , அச் சிலையால் இதையெல்லாம் செய்ய முடியாது.
ஆனால் பக்தர்களின் குறை தீர்க்கும் பணியை செய்ய முடியும்.

எப்படி ?

அப்படித்தான் ....

- பாசு . ஓவியச்செல்வன்

மதம் குறித்து மார்க்ஸ் ...

மக்கள் இன்பமான வாழ்க்கை வாழ வேண்டுமா ? 
முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.

- காரல் மார்க்ஸ் -

பெரியார் கொள்கை பரப்பும் பணியில் தமிழர் தலைவர் கி. வீரமணியின் அளப்பரிய பங்கு ...

 

பெரியார் கொள்கை தாங்கும் நூல்களை தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எல்லாம் வெளியீடு. 

விடுதலை எட்டுப் பக்கம் ஆனதும், இரு இடங்களில் பதிப்பு என்று ஆக்கப்பட்டதும்,

பெரியாருக்குப் பின் உண்மை மாதம் இருமுறை ஆனதும்,

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ் மீண்டும் கொண்டு வரப்பட்டதும்,

குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழ் ஆரம்பிக்கப்பட்டதும்,

பாமர மக்களும் தந்தை பெரியார்பற்றி அறிந்துகொள்வதற்குப் பெரியார் திரைப்படம் எடுக்கப்பட்டதும்,

பெரியார் வலைக்காட்சி தொடங்கப்பட்டதும்,

முந்நூறுக்கும்மேல் பகுத்தறிவு நூல்களை மலிவு விலையில் வெளியிட்டதும்,

அதனைப் பரப்பிட பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை ஏற்பாடும்,

புத்தகக் கண்காட்சிகள் நடப்பும், பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன முறையில் ஓங்கி வளர்க்கப்பட்டு இருப்பதும்,

தமது சொந்த 10,277 நூல்களை பெரியார் நூலகம் ஆய்வகத்துக்கு தமிழர் தலைவர் வழங்கியதும்,

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்கம்பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதும்,

இந்தியாவின் தலைநகரிலேயே பெரியார் மய்யம் எழுப்பப்பட்டு இருப்பதும்,

உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரியார் பன்னாட்டு மய்யம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதும்,

உலக மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகத்தை அங்கம் வகிக்கச் செய்திருப்பதும்,

பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அதில் பெரியார் சிந்தனைகள் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு சான்றிதழ் முதல் முனைவர் பட்டப் படிப்புவரை பெறுவதற்கு வகை செய்யப்பட்டு இருப்பது.

- கலி. பூங்குன்றன் "விடுதலை" 01-08-2009

வேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணம் ...



நான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய ஒரு வாரத்தில் எனக்கு பிரசவமானது. குழந்தை பேற்றுக்கு பிறகு, 3 மாதங்கள் வரை விடுப்பு கேட்டிருந்தேன். இன்னும் சிறிது காலம் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய தேவை இருந்தது. விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க கேட்டேன். அலுவலகத்தில் ஒத்துழைத்தார்கள்.

குழந்தைக்கு அருகில் இருந்த 5வது மாதத்தில் குழந்தைக்கு மாற்று உணவுக்கு பழக்கினேன். குழந்தையும் ஒத்துழைத்தான். அருகருகிலேயே உறவுகள் அமைந்துவிட்டதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடும் தேவை ஏற்படவில்லை. அவர்களே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொண்டார். குழந்தையை விட்டு வேலைக்குப் போகிறோமே என்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு உண்டாகவில்லை. எனக்கென்றும் என் குடும்பத்திற்கென்றும் நான் வேலைக்குப் போகும் தேவையிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி கொள்ள ஏதும். இந்த குற்றவுணர்ச்சி பற்றி ஏராளமான பெண்கள் என்னிடம் கேட்டதுண்டு. அப்படி எதுவும் இல்லை, என் குழந்தை நான் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உன்னிப்பாக பார்க்கிறான், அதிலிருந்து அவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலே கற்கிறான் என்று அவர்களிடம் பேசுவேன். அது அவர்களுக்கு உகந்த பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்ப்பது என் செய்வது என் தலை எழுத்து என்கிற புலம்பலைத்தான்.

உறவுகள் இருந்தார்கள் அதனால் அவர்களிடம் குழந்தையை விட்டுப்போவதில்லை என்ன பிரச்னை இருக்கப்போகிறது எனக்கேட்கலாம். சிலதை சொல்லிவிடுகிறேன். காலையில் நானும் கணவரும் அலுவலகம் கிளம்புவதற்கு முன் குழந்தைக்கு நாள்முழுக்கத் தேவைப்படும் உணவு, இயற்கை உபாதைகளை கழிக்க வைத்து குளிப்பாட்டுவது என எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம். குழந்தை பராமரிப்பு நிலையங்களில் எப்படி எல்லா தயாரிப்புகளோடு கொண்டுபோய் விடுவோம் அப்படித்தான் எல்லாமும் நடக்கும். உறவுக்கு தனிப்பட்ட வேலைகள் இருக்கும், அவர்களை எதிர்பார்ப்பது நியாமற்றது. குழந்தையை பார்த்துக்கொள்வதே பெரிய உதவிதானே. ஆகவே, குழந்தை பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் சிக்கல் இங்கேயும் இருப்பது இயற்கையானதே. குழந்தைக்கு காய்ச்சல் என்றால் நாம்தான் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்பது அவ்வப்போது வருவது இயல்பானதே. ஆனால் நம் உறவுகளும் சில சமயம் நம்முடன் வேலை பார்ப்பவர்களும் ஏற்படுத்தும் பீதி, அவஸ்தையான ஒன்று.

நன்றி - http://mvnandhini.com/

நமக்கு எதுக்கு பாஸ் கடவுள் ? ? ?

வீட்டு வாடகைக்கு நாம் தான் உழைக்கணும்
கரண்ட் பில்லு கட்ட நாம் தான் உழைக்கணும்
கேஸ் பில்லுக்கு நாம் தான் உழைக்கணும்
கேபிள் டிவிக்கு நாம் தான் உழைக்கணும்
அரிசி பருப்பு மளிகை சாமான் வாங்க நாம் தான் உழைக்கணும்
பால் வாங்க நாம் தான் உழைக்கணும்
போன் பில் கட்ட நாம் தான் உழைக்கணும்
வண்டிக்கு பெட்ரோல் போட நாம் தான் உழைக்கணும்
ஆஸ்பத்திரி செலவுக்கு நாம் தான் உழைக்கணும்

நமக்கு எதுக்கு பாஸ் கடவுள் ? ? ?

ஜாதி - கவிதை

எங்கிருந்து வந்ததடா...


நானும் நீயும் நாலாஞ்ஜாதின்னு
சொன்னவனை விட்டுவிட்டு
நமக்குள்ளே கொளுத்திக்கிட்டா
நல்லாதான் அவன் குளிர்காய்வான்...
எங்கிருந்து வந்ததடா உனக்குள்ளே ஜாதிவெறி!

ஓடி, ஓடி களையெடுத்தோம்!
ஒண்ணா நாம் நெல்லறுத்தோம்!
நேற்று வரை அக்கா, தங்கை
இன்று அவள் தாசிமகளோ?

இதுவரை நடக்கலையா?
நமக்குள்ளே திருமணங்கள்
நாமெல்லாம் மாமன் மச்சான்
ஈனர்களுக்கு பொறுக்கலையே
இதப் புரிஞ்சுக்கிட்ட நமக்குள்ளே... வெறுப்பில்லையே!

- நா. சுப்புலட்சுமி, திருப்பத்தூர் (வே.மா)