Saturday 16 August 2014

எளிமை விரும்பி காமராஜர் ...

நிகழ்ச்சி தொடங்க கொஞ்சம் தாமதமாகும் என்று பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து, பக்கத்துல ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டு தரோம், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ஐயா என்று சொல்கிறார்கள். எதுக்கு துட்டுக்கு புடிச்ச கேடா என்று கேட்டு விட்டு, ஏய் ”ஒரு பென்ஞ்சை எடுத்து அந்த வேப்ப மரத்துக்கு கீழ போடுங்கேன்”னு சொல்லி, தோளில் கிடந்த துண்டை தலைக்கு கொடுத்து படுத்து கொஞ்சம் ஓய்வு எடுக்க தொடங்குகிறார் ஒரு முதல்வர்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா உங்களால் ?

அந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜர்.

அதனால்தான் அவர் பெருந்தலைவர்.

- Muthazhagan Ma

No comments:

Post a Comment