Saturday 16 August 2014

கோயில் திருவிழா ...

வீட்டின் அருகில் இருக்கிற ஒரு கோயிலில் திருவிழா. ரெண்டு மூனு நாளா அம்மனை அலங்காரம் பண்ணின மாட்டு வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். 

ஊர்வலத்தின் இடையிடையே அம்மன் டிராவல் பண்ணும் மாட்டு வண்டி நிற்கிறது, அப்போது பக்தர்கள் பூசாரியின் கையிலிருக்கும் சூடத் தட்டை பயபக்தியோடு தொட்டுக் கும்பிட்டு விட்டு, சில்லரை காசுகளையும் நோட்டுகளையும் அந்த தட்டில் போடுகிறார்கள் .

உலோகத்தில் செய்யப்பட்ட அந்த அம்மன் சிலை, யார் பக்கமும் திரும்பவோ - யாரிடமும் பேசவோ - இருமவோ - தலை சொறியவோ - சிரிக்கவோ இல்லை.

அது சிலை , அச் சிலையால் இதையெல்லாம் செய்ய முடியாது.
ஆனால் பக்தர்களின் குறை தீர்க்கும் பணியை செய்ய முடியும்.

எப்படி ?

அப்படித்தான் ....

- பாசு . ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment