Saturday 16 August 2014

கோயில் கருவறை புனிதமானதா ? ?



நகை திருட்டை கண்டுபிடிக்கச் சென்ற மதுரை எஸ்.அய் அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்த கோவிலின் அர்ச்சகர்கள் தடுத்தார்கள்.

நீங்கள் உள்ளே வந்தால் மீனாட்சி அம்மன் கோவில் தீட்டாகிவிடும் என்று சொல்லி அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்து விட்டனர்.

அந்தக் காவல்துறை அதிகாரி எப்படி வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடியும்? இந்த அதிகாரி மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தார். நான் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் என்று சொன்னார்.

ஏன் உள்ளே விட மறுக்கிறார்கள்? என்று வெள்ளைக்கார அதிகாரிகள் கேட்டார்கள். ஜாதியின் காரணமாக என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் என்று சொன்னார்.

வெள்ளைக்காரர்களுக்கு அப்பொழுது தான் ஜாதி என்றால் என்ன? அதன் ஆதிக்கம் என்ன என்பது தெரிய வந்தது.

அதன்பிறகுதான் வெள்ளைக்கார அதிகாரிகள் சொன்னார்கள். நான் இதற்காகவே ஸ்பெஷல் உத்தரவு போடுகிறேன். எங்கே வேண்டுமானாலும் நீங்கள் உள்ளே நுழையலாம் என்று உத்தரவு போட்டு அந்த மதுரை எஸ்.அய் அவர்களிடம் கொடுத்தார்கள்.

அந்த அதிகாரி தேனியில் இருந்தார். அண்மையில்தான் அவர் மரணமடைந்தார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்ற சம்பவத்தை நமது பயிற்சி முகாமில் அங்கே சொன்னார். அவர் நடந்த சம்பவத்தை தெளிவாகச் சொன்னார். நான் முதலில் அர்ச்சகரைத் தான் அழைத்து முதலில் இரண்டு அடிகொடுத்து விசயத்தைக் கேட்டேன் என்று சொன்னார்.

அர்ச்சகரை அடித்தவுடன் அந்த அர்ச்சகர் அடிதாங்க முடியாமல் உண்மையைச் சொல்லிவிட்டான். நான் தான் நகையை எடுத்தேன். பின்னால் ஒளித்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னான்.

நகை இருக்கிற இடத்திற்கு அர்ச்சகரைத் தவிர வேறு யாரும் உள்ளே போக முடியாது. கர்ப்ப கிரகத்தில்தான் நகை இருந்தது. அந்த நகையை திருடியவன் பார்ப்பன அர்ச்சகன்தான் என்பதை அந்த அதிகாரி கண்டுபிடித்தார்.

- சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி ... “விடுதலை” 24-1-2010

No comments:

Post a Comment