Sunday 19 October 2014

புலன் - கவிதை

கையிலிருக்கும் வீணை கொண்டு
சரஸ்வதி ஒலி எழுப்பி
எவரேனும் கேட்டதுண்டா ?

மயில் மீதேறி முருகன்
எங்கேனும் பயணித்ததை
எவரேனும் கண்டதுண்டா ?

இலட்சுமியின் தாமரை
மணம் உமிழ்ந்து
அதை முகர்ந்தவர் உண்டா ?

சிவன் தலை மீதிருந்த
கங்கையின் ருசி அறிந்த
நாவுகள் உண்டா ?

பசியை பிணியை
உணர முடிகிறதே !

பகவானை உணர முடியலையே ...


- பாசு . ஓவியச் செல்வன்

No comments:

Post a Comment